POLLING 📊 TN ELECTION 2026

 

ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழு அல்ல - கே.பாலு பேட்டி

3 months ago 29 டிசம்பர் 2025 11:53 AM | views : 248
சென்னை,

பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,

ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு எப்படி நடக்கும் என இலக்கணங்கள் இருக்கின்றன. பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்காக செயற்குழுவில் அது குறித்து விவாதிப்பார்கள். விவாதித்த பின்னர் செயற்குழுவில் இருந்து பொதுக்குழுவிற்கு கொண்டு வருவார்கள். இது தான் நடைமுறை.

அதிலும் செயற்குழு என்பது சில நேரங்களில் ஒரு அரங்கில் நடைபெறும். பொதுக்குழு என்பது வேறு அரங்கில் நடைபெரும். அதனை தலைவர்கள் மட்டும் நடத்துவாரகள். விவாதித்து முடிவு எடுப்பார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக செயற்குழுவும், பொதுக்குழுவும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடத்திய ஒரு கேலி கூத்து சேலத்தில் நடந்திருக்கிறது. அவர்கள் சொன்னது இதனை பாமக பொதுக்குழு என்று சொன்னார்கள். இன்று நடைபெற்றது பாமகவின் பொதுக்குழு அல்ல. பொதுக்குழு கட்சியின் செயலாளர், தலைவரால் கூட்டப்பட வேண்டும். அப்படியும் இது கூட்டப்பட வில்லை. இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாமக கட்சியினை கட்டுப்படுத்தாது. எனவே இது பொதுக்குழு அல்ல.

முதலில் 10.04.2025-ல் ராமதாஸ் தன்னை தானே தலைவர் என்று அறிவித்தார். பின்னர் 29.05.2025 ம் தேதி தலைமை நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக அறிவித்ததாக அறிவிப்பு வெளியானதாக தகவல் வெளியானது. ஆனால் இது வரை அப்படி ஒரு நிர்வாக குழு நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை. 08.07.2025ல் செயற்குழு நடைபெற்றது. அதில் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதாக சொன்னார்கள். 17.08.2025ல் சங்கமித்திராவில் பொதுக்குழு நடத்தினர். அதனுடைய முடிவுகளை டெல்லிக்கு அனுப்பினார். அதனை டெல்லி நிராகரித்தது.

அதற்கு முன்னர் 9.08.2025 அன்று மகாபலிபுரத்தில் நாங்கள் நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அன்புமணியின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ம் தேதி வரை நீட்டித்து ஒரு உத்தரவு கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார்கள்.

அதற்கு பிறகு ராமதாஸ் தரப்பில் நிறைய கடிதம் கொடுத்ததாக சொல்கிறார். அன்புமணிதான் தலைவராக இருக்கிறார் என்கிற சான்றுகள் எங்களிடம் உள்ளது. வேறு பதிவுகள் எங்களிடம் இல்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று தான் டெல்லி சொன்னது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் கோவை கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN CONGRESS கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM இந்திய அணி தென்காசி வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION OPS நெல்லை ASSEMBLY ELECTIONS தேவர் வன்னியர் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் விடுமுறை மதுரை MADURAI SEEMAN NORTHEAST MONSOON தூத்துக்குடி அஜித் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை ஓபிஎஸ்