Tamil News & polling
புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை 4 மணி முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக் காடசியளிக்கிறது. நேற்று மாலை முதல் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
ஆனால், இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடலூரில் வெள்ளி கடற்கரையிலும் மக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் அலைமோதுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விஜய் Vijay DMK Chennai சென்னை TVK திமுக அண்ணாமலை Annamalai தவெக அதிமுக பாஜக கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu BJP எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் MK Stalin AIADMK ADMK TTV Dhinakaran மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சீமான் Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் Thirumavalavan PMK Sengottaiyan வடகிழக்கு பருவமழை முக ஸ்டாலின் Seeman AMMK வானிலை ஆய்வு மையம் டிடிவி தினகரன் Edappadi Palaniswami பாமக கைது Tamilaga Vettri Kazhagam