INDIAN 7

Tamil News & polling

காங்கிரஸ் வேண்டாம்: தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சு

07 ஜனவரி 2026 08:47 AM | views : 45
Nature

சென்னை,

கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதிலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய் பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், "அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறிவிட்டு, அதைதர மறுத்துவிட்டார்கள். எனவே, கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிவிட்டார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடலூரில் வரும் 9-ந் தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் ரகசிய ஓட்டெடுப்பையும் பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.

இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொள்கையுடன் இருக்கும் தி.மு.க. இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இருந்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாற்று சக்தியாக இருப்பதால், காங்கிரஸ் கட்சியும் அந்த ஒற்றை கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், தி.மு.க.வும் புது முடிவு எடுத்துள்ளது.

காங்கிரஸ் போனால் என்ன, தே.மு.தி.க.வை கூட்டணிக்கு கொண்டுவருவோம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுவும், பிரேமலதா, விஜய் பிரபாகரன் போட்டியிட குறிப்பிட்ட தொகுதியையும் ஒதுக்கித்தர முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால், கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகள் தி.மு.க.வுக்கு மிச்சமாகும். அதில், 9 தொகுதியை தே.மு.தி.க.வுக்கு கொடுத்துவிட்டு, கூடுதல் தொகுதிகள் கேட்கும் கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறதாம். கூடுதலாக சில தொகுதிகளை தி.மு.க.வே கையில் எடுக்கவும் முடிவு செய்துள்ளதாம்.

மொத்தத்தில், அரசியலில் காங்கிரஸ் எடுக்கும் சில முடிவுகளை தி.மு.க. தனக்கு சாதகமாகவே அமைத்துக்கொள்கிறது.

காங்கிரஸ் வேண்டாம்: தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சு1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு,

Image சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Image புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப்

Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image சென்னை, கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு

Image சென்னை, சென்னை, பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்

Image கோவை: மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்