ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 10 லட்சம் இழந்த என்ஜினியர் தற்கொலை

By Admin | Published in செய்திகள் at அக்டோபர் 10, 2021 ஞாயிறு || views : 238

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 10 லட்சம் இழந்த என்ஜினியர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 10 லட்சம் இழந்த என்ஜினியர் தற்கொலை

வாணியம்பாடி அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில், 10 லட்சம் ரூபாய் இழந்த ஐ.டி., என்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருேஷாத்தமகுப்பம் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 65. விவசாயி.இவரது மகன் ஆனந்தன், 30. இவர் சென்னை ஐ.டி., நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு நேற்று 9 ம் தேதி ஆனந்தன் வந்தார். காலை 9:00 மணிக்கு ஓட்டு போட்டார். அன்று மாலை பெற்றோர் வெளியே சென்று விட்டு இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டினர்.திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்ததில், ஆனந்தன் ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.


வாணியம்பாடி போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அதில், ஆன்லைன் மூலம் மொபைல் போனில் ரம்மி சூதாட்டத்தை ஆனந்தன் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் 10 லட்சம் ரூபாய் இழந்து விட்டார். சாமி படத்தின் முன்பு சத்தியம்இது குறித்து பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அவரை கண்டித்தனர்.


இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை தங்களிடம் கொடுத்து விட வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடக் கூடாது என சாமி படத்தின் முன்பு சத்தியம் செய்து கொடுக்க செய்தனர்.பின் உறவினரை பார்க்க பெற்றோர் வெளியே சென்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட முடியாமல் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

ஆன்லைன் சூதாட்டம் என்ஜினியர் தற்கொலை
Whatsaap Channel
விடுகதை :

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


விடுகதை :

கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது

தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி மேற்சொன்ன பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்க அனுப்பியுள்ளனர். அந்த லிங்க் மூலம் மேற்படி பெண்

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!


கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்


யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை


கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next