4 years ago
29 அக்டோபர் 2021 10:43 AM | views : 162
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் 8-ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ம் தேதியும், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.