திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்களாக ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார், தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 9 பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே திமுக சார்பில் சுபினா என்பவரை பேரூராட்சி தலைவராக திமுக அறிவித்தது. இன்று காலை திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. ஆனால் திமுகவின் சுபினாவுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. கமலா நேரு என்பவர் திமுக கூட்டணி சார்பில் கமலா நேரு என்பவர் தலைவராக்க முன்மொழிந்தனர்.
அதிமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவரானார்.
இந்த மறைமுக தேர்தலின்போது பாஜக கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தான் தலைவர் வேட்பாளர்கள் 9 ஓட்டுகள் பெற்றனர். இல்லாவிட்டால் எளிமையாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். குலுக்கல் முறையில்தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!