தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலையாக மாறிய வரலாறு!

ஆகஸ்ட் 03, 2022 | 04:23 am | views : 123
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் ஏராளமான கொங்கு அமைப்புகள் மரியாதை செலுத்தி வருகின்றன.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டிய இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியினருக்கு 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மகனாகப் பிறந்தார் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்று சிறந்து விளங்கினார்.
கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி புரிந்ததால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்குச் சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாகச் சொல்' என்று கூறியதால் அன்று முதல் 'சின்னமலை' என்ற பெயர் பெற்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
திருக்கோவில்களுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தமிழ் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை மாபெரும் வெற்றி பெற்றார்.
தீரன் சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலை மற்றும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
![]() |
![]() |
நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
என்ற இணையதள
இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!
ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த