தீர்க்கதரசி
பசும்பொன் தேவர் உசிலம்பட்டி அருகில் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அவ்வீட்டிலிருந்த நல்ல தண்ணீர்க் கிணற்றில் குடிநீர் எடுக்கப் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
ஆனால் சில பெண்கள் மட்டும் வெளியே தள்ளி நின்று கொண்டிருந்தார்கள் நண்பரின் பையன் நீர் இறைத்து அவர்களுக்கு ஊற்றிக்கொண்டிருந்தான் .
பசும்பொன் தேவர் விவரம் கேட்டார். "அவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்கள் அவர்கள் கிணற்றில் நீர் எடுத்தால் அது தீட்டாகிவிடும். வேறு யாரும் பிறகு தண்ணீர் இறைக்க மாட்டார்கள். எனவேதான் இந்த ஏற்பாடு!" என்று பதில் சொன்னார் நண்பர்.
தேவர் முகம் சிவந்துவிட்டது. "நான் போகிறேன். எனக்கு விருந்தும் வேண்டாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினை உள்ள இந்த வீட்டில் கை நனைக்க என் மனம் இடம் தரவில்லை," என்று கோப்ப்பட்டார் அவர்.
நண்பர் பதறிப்போனார். "ஐயா மன்னித்துவிடுங்கள் இனி இந்த தவறு நடக்காது என்று கூறினார். அன்று முதல் தாழத்தப்பட்ட பெண்களும் அக்கிணற்றில் மற்றவர்கள் போல் சமதையாக நீர் சேந்தத் துவங்கினர்.
இதில் தேவரின் நண்பராக வருபவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் தந்தை. நீர் இறைத்தது அவரது மகன் தா.பாண்டியன்.
-தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!