Tamil News & polling
தீர்க்கதரசி
பசும்பொன் தேவர் உசிலம்பட்டி அருகில் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அவ்வீட்டிலிருந்த நல்ல தண்ணீர்க் கிணற்றில் குடிநீர் எடுக்கப் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
ஆனால் சில பெண்கள் மட்டும் வெளியே தள்ளி நின்று கொண்டிருந்தார்கள் நண்பரின் பையன் நீர் இறைத்து அவர்களுக்கு ஊற்றிக்கொண்டிருந்தான் .
பசும்பொன் தேவர் விவரம் கேட்டார். "அவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்கள் அவர்கள் கிணற்றில் நீர் எடுத்தால் அது தீட்டாகிவிடும். வேறு யாரும் பிறகு தண்ணீர் இறைக்க மாட்டார்கள். எனவேதான் இந்த ஏற்பாடு!" என்று பதில் சொன்னார் நண்பர்.
தேவர் முகம் சிவந்துவிட்டது. "நான் போகிறேன். எனக்கு விருந்தும் வேண்டாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினை உள்ள இந்த வீட்டில் கை நனைக்க என் மனம் இடம் தரவில்லை," என்று கோப்ப்பட்டார் அவர்.
நண்பர் பதறிப்போனார். "ஐயா மன்னித்துவிடுங்கள் இனி இந்த தவறு நடக்காது என்று கூறினார். அன்று முதல் தாழத்தப்பட்ட பெண்களும் அக்கிணற்றில் மற்றவர்கள் போல் சமதையாக நீர் சேந்தத் துவங்கினர்.
இதில் தேவரின் நண்பராக வருபவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் தந்தை. நீர் இறைத்தது அவரது மகன் தா.பாண்டியன்.
-தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK அண்ணாமலை தவெக Annamalai அதிமுக பாஜக கனமழை BJP TTV Dhinakaran தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி ADMK MK Stalin திருமாவளவன் AIADMK அன்புமணி ராமதாஸ் AMMK மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss டிடிவி தினகரன் சீமான் தமிழ்நாடு PMK செங்கோட்டையன் Thirumavalavan Seeman Sengottaiyan முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் Congress Edappadi Palaniswami வடகிழக்கு பருவமழை பாமக Tamilaga Vettri Kazhagam காங்கிரஸ் Nellai நெல்லை தமிழகம் வானிலை ஆய்வு மையம்