திராவிடம் என்றால் என்ன? கவிதை வரிகள்

❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?

திராவிடம்னா என்னவா ..?*❤️



🏴அட அற்பமே ...

அங்கம் சிதைந்த சிற்பமே ...

சொல்கிறேன் கேள் ...



🏴அன்றொரு நாள் ...

நீ

அநாதையாய்த்

தெருவில்

நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...



அப்படி

2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த

உன்னை...



100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து

தலைவாரி விட்டதே ...

அதன் பெயர் தான்

"தம்பி" திராவிடம் ...



🏴சக்கிலியனைத்

தொட்டால் தீட்டு ....

சாணனைப்

பார்த்தாலே

தீட்டு ...

என்ற

வர்ணாசிரமத்தின் ...

சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...



*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....

அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...



🏴கம்பனில்லையா ...

வள்ளுவரில்லையா ...

என்று

சங்க காலத்தில் சரித்திரம்

தேடும் தரித்திரமே ...



🏴பனையேறியே செத்துப் போன உன்

படிக்காத பாட்டனை நினை ...



🏴பானை செய்தே உடைந்து போன உன்

தாத்தாவின் தகுதியை யோசி ...



🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...

நண்டோடு உண்டாடிய

கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?



🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....

பேனாவைக் கொடுத்தது யார்..?



🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...

விளக்கேற்ற சொன்னது யார் ....?



🏴வண்ணான் ...

அம்பைட்டையன் ....

என்ற வார்த்தைகளை எல்லாம் ...

வழக்கொழிக்கச் செய்தது யார் ...?



🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...

மொத்த தமிழனையும் ...

ஆரியன்

அழைத்தபோது ...



முதன்முதலில் ஆத்திரம்

கொண்டது யார்...?



அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...



🏴மராட்டியர்களிடமும் ...

நாயக்கர்களிடமும் ...

தோல்வியடைந்து

நிலத்தையும்

நாட்டையும் ...

இழந்தபோது

வராத ரோஷம் ...



🏴நம்பூதிரி

பார்ப்பணர்களால் ...

தன்தாய்மார்கள் ...

வரி செலுத்த வழியின்றி

வெற்று மார்போடு ...

வீதியில் அலைந்தபோது ...

வராத கோபம் ...



🏴நூற்றாண்டு திராவிடம் தந்த

சமூகநீதியால் ....

அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த

பொருளாதார வளத்தால் ...



🏴உடல் பருத்து...

கொழுப்பேறியபோது ...

திணவெடுத்து ...

மெல்ல மெல்ல

நக்கத் தொடங்கிய

Naய்களுக்கு ...



🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..



தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹 பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel