3 years ago
11 அக்டோபர் 2022 12:17 PM | views : 180
சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பஸ்ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் இருக்கு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலி கட்டி உள்ளார். சீருடையில் மாணவர்கள் இருவரும் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் ஏற்கனவே மாணவரிடம் நேற்று முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.