பிரிட்டன் பிரதமர் என்ற பதவியை அலங்கரிக்க ஆளுங்கட்சியின் 100 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டும். அந்த வகையில் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவோடு அடுத்த பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், முதல் இந்து பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960களில் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அனௌஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ரிஷி சுனக்கிற்கு மிகவும் பிடிக்கும்.
அதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார். பகவத் கீதை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதையொட்டியே தனது மகள்களில் ஒருவருக்கு 'கிருஷ்ணா' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. யார்க்ஷைர் எம்.பியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற போது பகவத் கீதை மீது சத்ய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இதற்கு முன்பு எந்தவொரு எம்.பியும் பகவத் கீதையையும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. தனது நெருக்கடியான காலகட்டங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பகவத் கீதை தான் பெரிதும் உதவியதாக பலமுறை கூறியிருக்கிறார். டவுனிங் தெருவில் உள்ள தனது குடியிருப்பில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.
தனது இந்திய பாரம்பரியத்தையும், பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த கலாச்சாரத்தையும் ஒருபோதும் மறக்காதவர். அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் பெங்களூரு வந்து தனது மாமனார் நாராயணமூர்த்தியை பார்த்துவிட்டு செல்வார். இங்கிலாந்து நாட்டின் மிகவும் பணக்கார பிரதமர் ரிஷி சுனக் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கிட்டதட்ட 700 மில்லியன் பவுண்டிற்கு மேல் சொத்துகளை வைத்திருக்கிறார்.
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடியால் பிரிட்டன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டிருக்கின்றன. மறுபக்கம் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வைத்திருக்கிறார் ரிஷி சுனக். இந்த முரண்பாட்டை சரிசெய்து பிரிட்டனை மேம்படுத்தி காட்டுவாரா? நிதிநிலையை சீர்செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!