கவுதம் - மஞ்சிமா திருமணம் நவம்பர் 28ம் தேதி நடக்கிறது!

நவம்பர் 12, 2022 | 12:05 pm | views : 1762
80களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக்கின் மகனான கவுதம், மணிரத்தனத்தின் கடல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் படங்களிலும் நடித்தவர் மஞ்சிமா மோகன். இருவரும் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது காதல் கொண்டனர்.கடந்த 3 வருடமாக இருவரும் காதலித்து வந்தபோதும் அது சமீபத்தில்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போன்று தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைகொடி காட்டிவிட்ட நிலையில் வருகிற 28ம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அதன்பிறகு சென்னை மற்றும் கொச்சியில் நடக்கும் திருமண வரவேற்பு விழாவில் நண்பர்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதனை இரு குடும்பத்தினரும் முறைப்படி இன்னும் அறிவிக்கவில்லை.
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த