சுவாமிதோப்பில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்!

சுவாமிதோப்பில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்!

  நவம்பர் 21, 2022 | 04:42 pm  |   views : 1730


சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.







கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க, இன்று மதியம்



Also read...  திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!


கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.









பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், உதயநிதி ஸ்டாலின் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயில் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிதோப்பு பதியின் பள்ளி அறைக்கு சென்ற உதயநிதி, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார். ஆனால் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டருக்கு அடையாளமான தலைப்பாகையும் நாமமும் கோவில் நிர்வாகம் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படவில்லை.





தரிசனம் செய்த பின்னர், பொதுமக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.









ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!

2023-09-09 02:35:20 - 2 weeks ago

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..! ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது; 2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்


முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?

2023-09-21 04:25:08 - 2 days ago

முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன? தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன? மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நான் பேட்டி எடுத்த பல


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 2 days ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!

2023-09-20 16:42:13 - 2 days ago

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு