INDIAN 7

Tamil News & polling

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜின் பரபரப்பு ஆடியோ!

By E7 Tamil 03 டிசம்பர் 2022 11:30 PM
Nature

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கோவை செல்வராஜ்,  உள்ளிட்டோர் தீவிர ஆதரவாளராக அறியப்படுகின்றனர்.

குறிப்பாக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு இபிஎஸ் அணியை கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தே விலகுவதாக கோவை செல்வராஜ் பேசும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஆடியோவில் பேசியுள்ள கோவை செல்வராஜ், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான பின் ஓபிஎஸ்- பதவிக்காக ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு அப்போல்லோவில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.



ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று உயிரோடு கொண்டுவரவில்லை. சுயநலவாதிகளுடன் சேர்த்து பணியாற்ற எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட பதவி முக்கியம் என செயல்பட்டுள்ளனர். இபிஎஸ்- ஓபிஎஸ் என இருவரின் தலைமையில் செயல்பட தமக்கு விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவுக்காக இந்த இயக்கத்தில் பணியாற்றினேன், செயல்பட்டேன் என பேசினார்.

மேலும் சுயநலத்திற்காக சண்டை போடுவதால் அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. கட்சியை அழிக்கும் செயலில் நான் ஈடுபடக்கூடாது என விலகுகிறேன் எனவும் அரசியலில் இருந்து தாம் விலகவில்லை என குறிப்பிட்டுள்ளார். திராவிட பாரம்பரியத்தில் வந்த நான் அதில் தான் இருப்பேன் என்றும் தற்போது நான் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அந்த ஆடியோவில் கோவை செல்வராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Whatsaap Channel


Image கோபிசெட்டிபாளையம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.


கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்


நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள


திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்


உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை