அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கோவை செல்வராஜ், உள்ளிட்டோர் தீவிர ஆதரவாளராக அறியப்படுகின்றனர்.
குறிப்பாக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு இபிஎஸ் அணியை கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தே விலகுவதாக கோவை செல்வராஜ் பேசும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆடியோவில் பேசியுள்ள கோவை செல்வராஜ், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான பின் ஓபிஎஸ்- பதவிக்காக ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு அப்போல்லோவில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று உயிரோடு கொண்டுவரவில்லை. சுயநலவாதிகளுடன் சேர்த்து பணியாற்ற எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட பதவி முக்கியம் என செயல்பட்டுள்ளனர். இபிஎஸ்- ஓபிஎஸ் என இருவரின் தலைமையில் செயல்பட தமக்கு விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவுக்காக இந்த இயக்கத்தில் பணியாற்றினேன், செயல்பட்டேன் என பேசினார்.
மேலும் சுயநலத்திற்காக சண்டை போடுவதால் அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. கட்சியை அழிக்கும் செயலில் நான் ஈடுபடக்கூடாது என விலகுகிறேன் எனவும் அரசியலில் இருந்து தாம் விலகவில்லை என குறிப்பிட்டுள்ளார். திராவிட பாரம்பரியத்தில் வந்த நான் அதில் தான் இருப்பேன் என்றும் தற்போது நான் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அந்த ஆடியோவில் கோவை செல்வராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
“மாந்திரீக பூஜை என்றால் என்ன,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்ட கேள்விக்கு, “மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை, இந்த ஆட்சியில் எங்கும் இல்லை,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு, திருமண மண்டபம் கட்ட வேண்டும்.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது..தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:- மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!