ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்

By Admin | Published in செய்திகள் at டிசம்பர் 13, 2022 செவ்வாய் || views : 208

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது.

அதேப்போன்று வரஉள்ள 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க கூடிய பொங்கல்  பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருட்களை   தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில்  2017 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகை  முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது .

இவை தவிர அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், அந்த நிறுவனங்கள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது.   இதற்கு மாற்றாக அவற்றை  தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால்  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இது தொடர்பாக நடவடிக்கை  கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு   நீதிபதிகள் கிருஷ்ண குமார்,  விஜயகுமார்  அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இது தமிழக அரசின் கொள்கை முடிவு.  தற்போது  முன் கூட்டியே  தெரிவிக்க இயலாது.  எனவே  மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்  வாதிட்டார். இந்த தகவலை,  பதில் மனுவாக. தமிழக கூட்டுறவுத்துறை செயலர்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கு  விசாரணையை   ஒரு வாரம் ஒத்தி வைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PONGAL GIFT PONGAL GIFT TAMILNADU PONGAL GIFT CASE PONGAL GIFT HIGHCOURT RATION CARD RATION SHOP MK STALIN ரேஷன் கார்டு ரேஷன் அட்டை ரேஷன் கடை
Whatsaap Channel
விடுகதை :

உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


விடுகதை :

வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


விடுகதை :

பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம்!

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம்!

தமிழ்நாடு அரசு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை கொடுக்கும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என

இருமொழிக் கொள்கை போதும் என்பதே எனது பிறந்த நாள் செய்தி : மு.க.ஸ்டாலின் பேட்டி

இருமொழிக் கொள்கை போதும் என்பதே எனது பிறந்த நாள் செய்தி : மு.க.ஸ்டாலின் பேட்டி

72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்." என்று முழங்கினார். துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர். அண்ணா, கருணாநிதி

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேசியதாவது; எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களால்தான் நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். இது நான் நினைத்துப்பார்க்காத இடம். 2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். விரிசல் வராது. விரிசல்

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

சென்னை: சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச தாய் மொழி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச தாய் மொழி நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எம்மொழிக்கும்

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!


எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?


சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!


செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !


சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next