ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். பற்றியும் யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தமிழக மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கட்சியின் சட்டப் போராட்டங்களை குறித்து கவலைக் கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்திய ஈபிஎஸ், தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை வீழ்த்துவது உறுதி எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இல்லை என்றும், அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!