POLLING 📊 TN ELECTION 2026

 

அதிமுக 5 துண்டு, திமுக வெறும் விளம்பரம்... இனி நாமதான் - அன்புமணி

3 years ago 31 டிசம்பர் 2022 10:01 AM | views : 168
பட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், மே 5ம் தேதி சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாமக ஒன்று இல்லை என்றால் தமிழகத்திற்கு சமச்சீர் கல்வி வந்து இருக்காது; லாட்டரி ஒழிந்து இருக்காது; இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி. 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது; ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம். காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பாமக-திமுகவுடன் சேர்ந்து விடுமோ என கேட்கிறார்கள். நமது இலக்கு தமிழக வளர்ச்சிதான்” என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.

நிலக்கரியை விட தரம் குறைவான லிக்னைட்டை எடுப்பதற்காக நெய்வேலியில் 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும் அதற்கு 2 அமைச்சர்கள் ஆதரவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

"A" என்று தொடங்கும் தனியார் நிறுவனம் என்எல்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த விவசாய நிலங்களை கைப்பற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலத்தை தாரை வார்த்தவர்களில் பலர் உரிய இழப்பீடு கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் தனியார் வசமாக போகிறது என்ற தகவலும் அதற்காகவே பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி என்ற தகவலும் நெய்வேலி சுற்றுவட்டார மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்ப நமக்கு ஏற்ற அரசியல் சூழல் இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடைக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஒரு கட்சி தலைவர் தினமும் மீடியா பார்கிறார். மற்றொருவர் வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர். அதிமுக 5 துண்டாகி விட்டது. திமுக விளம்பரம்தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி” என குறிப்பிட்டார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN கனமழை உதயநிதி ஸ்டாலின் AIADMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் கைது கோவை சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழ்நாடு திருமாவளவன் INDIAN CRICKET TEAM COIMBATORE கொலை சீமான் பிரதமர் மோடி அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH AJITH PARLIAMENT ELECTION தீபாவளி தென்காசி EDAPPADI PALANISWAMI NELLAI OPS ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS நெல்லை தேவர் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை SEEMAN கள்ளக்காதல் அஜித் ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை தமிழக சட்டசபை தேர்தல் MADURAI வன்னியர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION PRIME MINISTER MODI CSK திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை