Tamil News & POLLING

 

ரூ.789 கோடிக்கு மது விற்பனை: இதுதான் நல்லாட்சிக்கான இலக்கணமா?- நயினார் நாகேந்திரன்

4 months ago 22 அக்டோபர் 2025 02:16 PM 154 views
தீபாவளியையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.789 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், திமுக அரசின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.

சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.

அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்?

மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TTV DHINAKARAN MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் சீமான் தமிழகம் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை பாமக UDHAYANIDHI STALIN CONGRESS கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை SEEMAN கொலை NELLAI EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக கோவை திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு TAMIL ACTRESS OPS நெல்லை COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி மதுரை சட்டசபை தேர்தல் திருமாவளவன் விடுமுறை வன்னியர் 2024 T20 WORLDCUP TAMIL CINEMA தேவர் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு MADURAI ஓபிஎஸ் தீபாவளி டாப் நியூஸ் டிரெண்டிங் NORTHEAST MONSOON நாம் தமிழர் கட்சி THIRUMAVALAVAN AJITH ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் கொரோனா திருப்பரங்குன்றம் THOOTHUKUDI