நேற்று நள்ளிரவில் அவருடைய மனைவியுடன் இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தார் பின்னர் தாம்பத்தியம் சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 27. இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும் 25 வயது பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் கணவர் சமீப நாட்களாக மனவருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.
நேற்று நள்ளிரவில் அவருடைய மனைவியுடன் இரவு 12 மணிவரை பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தாம்பத்தியம் சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோபம் அடைந்த ராஜேந்திரன் வீட்டின் முன் ஹாலில் படுத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மனமுடைந்து இரவு 1 மணிக்கு மேல் , படுக்கை அறைக்குச் சென்று வீட்டு சீலிங்கில் உள்ள ஊக்கில் தூக்கு மாட்டி கொண்டதாக தெரிகிறது
காலை 7 மணிக்கு மனைவி எப்பொழுதும் போல அவருடைய ரூமுக்கு சென்று பார்க்கும் போது படுக்கை அறையில் தூக்கு மாட்டி கொண்டு இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
உடனடியாக வந்த உறவினர் செந்தில்குமார் தூக்கில் இருந்து இறக்கி கட்டிலில் படுக்க வைத்து உள்ளார். பின்னர் பேரூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் தாம்பத்தியத்திற்கு மனைவி சம்மதிக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தற்கொலைக்கான காரணத்தை உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!