சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!
ஜூலை 07, 2021 | 08:03 am | views : 1779
மத்திய அமைச்சரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்துகள் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இதில் அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் கருதினார். ஆனால் மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது அது போல் இடம் கிடைக்கவில்லை.
Also read... கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு, ரூ.57.32 கோடிக்கு சொத்து:
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நிச்சயம் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை பெறுவது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்தார். இதற்காக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெற பாஜக கூட்டணி கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன. அதில் ஒருவர் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ். இவர் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்.
ஆனால் பாஜகவின் சாய்ஸ் எல் முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோராக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.
மேலும் பாஜகவால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தோற்றதற்கு அதிமுகதான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறார்கள். தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் கழித்து திடீரென ஏன் இப்படி ஒரு கருத்து என நீங்கள் நினைக்கலாம்.
விஷயம் இல்லாமல் இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு இருந்தாலும் அணிகளாகவே உள்ளனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள். சிவி சண்முகம் பேசியது எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை பேரில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை மட்டும் ஜெயிக்க வைத்துவிட்டார் என்றும் சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட அதிமுகவினர் வெற்றிக்கு ஓபிஎஸ் உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்ததாக சொல்லப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்வு முதல் இருவரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பிளான் செய்து சிவி சண்முகத்தை பாஜகவுக்கு எதிராக பேச வைத்துள்ளாரா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
பாஜக கூட்டணியில் இணையும் பாமக!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆன்லைனில் கடன் வாங்கிய மாணவர் தற்கொலை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார். லோன் ஆப் மூலம் பெற்ற
தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ். திணறல்
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம்
அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை!
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்
கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்- விஜய் வசந்த் மீண்டும் நேரடி மோதல்?
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற