சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

By Admin | Published in செய்திகள் at ஜூலை 07, 2021 புதன் || views : 322

சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

மத்திய அமைச்சரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்துகள் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.


கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இதில் அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் கருதினார். ஆனால் மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது அது போல் இடம் கிடைக்கவில்லை.



இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நிச்சயம் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை பெறுவது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்தார். இதற்காக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெற பாஜக கூட்டணி கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன. அதில் ஒருவர் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ். இவர் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்.

ஆனால் பாஜகவின் சாய்ஸ் எல் முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோராக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.

மேலும் பாஜகவால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தோற்றதற்கு அதிமுகதான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறார்கள். தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் கழித்து திடீரென ஏன் இப்படி ஒரு கருத்து என நீங்கள் நினைக்கலாம்.


விஷயம் இல்லாமல் இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு இருந்தாலும் அணிகளாகவே உள்ளனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள். சிவி சண்முகம் பேசியது எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை பேரில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை மட்டும் ஜெயிக்க வைத்துவிட்டார் என்றும் சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட அதிமுகவினர் வெற்றிக்கு ஓபிஎஸ் உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்ததாக சொல்லப்பட்டது.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்வு முதல் இருவரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பிளான் செய்து சிவி சண்முகத்தை பாஜகவுக்கு எதிராக பேச வைத்துள்ளாரா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி சி.வி.சண்முகம் அமித்ஷா ஓபிஎஸ்
Whatsaap Channel
விடுகதை :

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


விடுகதை :

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next