இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!
மே 07, 2023 | 07:40 am | views : 1984
ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த நேரத்தில் உங்கள் உதடுகளை வைரத்தை போல மின்ன செய்வது தான் இதன் ட்ரிக்.
இந்த பியூட்டி ஹேக் மூலம் மெல்லிய உதடுகளை தடிமனாகவும், பெரிய உதட்டை சிறியதாகவும் காட்டலாம். வெறுமனே நமது கையில் இருக்கும் லிப்ஸ்டிக்கை வைத்து உங்கள் உதட்டை வைரம் போல ஜொலிக்க வைக்கலாம். நீங்களும் இது போன்ற கிளாசியான உதட்டை பெற விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
டைமண்ட் லிப்ஸ் மேக்கப் ட்ரெண்ட் என்பது என்ன?
Also read... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
ஒவ்வொரு அழகு நிபுணர்களும் புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புகின்றனர். ஏனென்றால், ஒரே மாதிரியான மேக்கப் முறைகளை கடைபிடித்தால் அது பழமையானதாக மாறுவதுடன் மக்கள் மத்தியில் சலிப்பையும் ஏற்படுத்தும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட புதிய மேக்கப் ட்ரிக் தான் இந்த டைமண்ட் லிப்ஸ். இதனால், உங்கள் உதவு மிகவும் கவர்ச்சிகரமாக தெரியும். அதுமட்டும் அல்ல, மற்றவர்களின் கவனத்தை எளிமையாக நீங்கள் ஈர்க்கலாம்.
டைமண்ட் லிப்ஸ் என்பது டிக்டோக்கில் வைரலாகி வரும் டிரெண்டிங் மேக்கப் ஹேக் ஆகும். இது பலரின் இதயங்களை வென்று வருகிறது. ஏனென்றால், இதற்கு தனியாக எந்த பொருளும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். கையில் உள்ள பொருட்களை வைத்தே நீங்கள் வைரம் போல ஜொலிக்கலாம். இந்த ஹேக் மூலம் உங்கள் உதடு, மூக்கு, தாடை ஆகியவற்றை ஹைலைட் செய்து காட்டலாம். டைமண்ட் லிப்ஸ் எவ்வாறு பெறுவது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
வைர உதடுகளை பெறுவது எப்படி?
1. முதலில் நீங்கள் ஒரு சில்வர் கலர் ஐலைனர் அல்லது ஐ ஷேடோவை உங்கள் உதட்டின் மேல் பகுதி (Cupid's bow) மற்றும் கீழ் உதட்டின் நடுப்பகுதியில் தடவ வேண்டும்.
2. இப்போது, உங்கள் விரலைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த கலர் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவவும்.
Also Read | ஒரு பைசா செலவில்லாமல் ஒரே வாரத்தில் முகம் பிரகாசிக்க இதை செய்தால் போதும்.!
3. இப்போது நியூட் கலர் லிப் பென்சிலை எடுத்து, கீழ் உதடுகளின் விளிம்புகளை மார்க் செய்யவும்.
4. உங்கள் உதடுகளின் மீது லிப் கிளாஸ்யை தடவவும். இப்போது உங்கள் உதடு வைரம் போல ஜொலிக்கும்.
இது உங்களுக்கு முழுமையான உதடு தோற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் மற்றொரு படி சேர்க்க விரும்பினால், நீங்கள் சிறிது ஷிம்மர் பவுடரை உபயோகித்து உதட்டின் தோற்றத்தை சரி செய்யலாம்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'
பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,