எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.1 மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைமை குறித்து மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும், அரசியலில் ஈடுபடும் நோக்கில் மக்கள் மன்றத்தை தொடங்கி பல பதவிகள், சார்பு அணிகள் உருவாக்கியதாகவும் கூறி உள்ளார். கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டு உள்ள அவர், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக தெரிவித்து உள்ளார்.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,....இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பு அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும், தனது அறிக்கையின் இறுதியில் வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S