தென் மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.
அதிலும் நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை மழை பதம் பார்த்தது.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ள நீரால் தத்தளித்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு மழை பெய்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், 'இலங்கைக்கு தென் கிழக்கே நிலவி வந்த வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிக்கு வந்து, பின்னர் குமரிக்கடல் பகுதிகளிலேயே வெகு நேரம் பயணித்தது. அதன் பின்னர் மணிக்கு 4 கி.மீ. வேகத்திலேயே தென் மாவட்டங்களையொட்டிய பகுதிகளை கடந்தது. இந்த வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு, காற்றில் ஈரப்பதம் அதிகளவில் குவிதல் போன்ற நிகழ்வுகளால் தென் மாவட்டங்களில் மழை கொட்டியுள்ளது' என்றார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பொதுவாக புயல், தாழ்வு மண்டலம், தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகள் வரும்போதுதான் அதிகனமழை இருக்கும். ஆனால் வளிமண்டல சுழற்சி உருவாகி, அதில் அதிகனமழை வரை இப்போது பெய்திருக்கிறது. இதுவரை இதுபோல் பெய்தது இல்லை எனவும் தெரிவித்தார்.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!