INDIAN 7

Tamil News & polling

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு அதி கனமழை எச்சரிக்கை

By E7 Tamil 22 அக்டோபர் 2025 09:39 AM
Nature

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் அதாவது காலை 8.30 மணிக்கு அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியை நெருங்கி நீடித்தது.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு மேலும் சற்று வலுவடைந்தது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

புயல் சின்னம் இன்று (புதன்கிழமை) வலுவான நிலையில் நீடிப்பதால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் இன்று 20 சென்டி மீட்டருக்கு மேல் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு உதவ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோவை, ஈரோடு, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் சின்னம் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புயல் சின்னம் இன்று மாலை மேலும் வலுவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அது புயலாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த புயல் சின்னம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அது கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு அதி கனமழை எச்சரிக்கை1



Whatsaap Channel


Image பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000

Image வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக பகுதிகளில் மழையை கொடுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட

Image தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு

Image தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை

Image சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வெப்பம் தணிந்து

Image சென்னை: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று

ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர்1

ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா


மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது


இன்றைய ராசிபலன் 24.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பாக்கிகள் வசூலாகும்

இன்றைய ராசிபலன் 24.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பாக்கிகள்


ஜாங்கிட் கதாபாத்திரம் இருட்டடிப்பு; பைசன் படத்துக்கு எதிராக கொந்தளிப்பு

ஜாங்கிட் கதாபாத்திரம் இருட்டடிப்பு; பைசன் படத்துக்கு எதிராக


திண்ணைல கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை... கிண்டல் செய்தவருக்கு சூரி கொடுத்த அசத்தல் பதில்

திண்ணைல கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை... கிண்டல் செய்தவருக்கு சூரி கொடுத்த அசத்தல்



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK திருமாவளவன் தவெக எடப்பாடி பழனிசாமி பாஜக கனமழை அண்ணாமலை Thirumavalavan Annamalai வடகிழக்கு பருவமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Northeast Monsoon தவெக மாநாடு MK Stalin சென்னை தமிழக வெற்றிக்கழகம் சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் TVK Conference Rajinikanth Seeman PMK AIADMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி Edappadi Palaniswami தமிழக அரசு வேட்டையன் AMMK indian cricket team ரஜினிகாந்த் TTV Dhinakaran பாமக Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் Tamil Nadu Udhayanidhi Stalin Chennai Tamilaga Vettri Kazhagam VCK PM Modi விசிக Vettaiyan மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி Ajith தமிழ்நாடு செங்கோட்டையன் காங்கிரஸ் தவெக விஜய் IMD நடிகை கஸ்தூரி அமரன் GetOut Stalin இந்தியா கைது ராமதாஸ் TVK Vijay Ind vs Nz Rain மழை தனுஷ் Tirunelveli திருநெல்வேலி rain அஜித் கோலிவுட் Sengottaiyan தூத்துக்குடி Ramadoss நயினார் நாகேந்திரன் விடுமுறை GetOut Modi மதுரை திமுக அரசு டி.டி.வி.தினகரன் Rajini