படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம், தனியார் மருத்துவமனையில் அனுமதி!
4 years ago
05 ஆகஸ்ட் 2021 08:59 AM | views : 135
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் தனது அடுத்த படத்திற்காக வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். அதே வேளையில், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று முக்கிய பாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது.
இந்த வீடு கட்டும் படப்பிடிப்பின்போது, வீட்டை சுற்றிப்பார்க்கும் காட்சியில் நடித்துள்ளார் சேரன். அப்போது கால் இடறி கீழே விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனின் தலையில் எட்டு தையல் போடப்பட்டு இருக்கின்றன.
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது . அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து தையல் போட்ட நிலையிலேயே வந்த நடித்துக் கொடுத்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார் சேரன். இதனால் நெகிழ்ந்துபோயிருக்கிறது படக்குழு.
படப்பிடிப்பு முடிந்து விட்டதால் சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி இருக்கின்றனர்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரன் - தலையில் 8 தையல்கள்