ரொம்ப நாளைக்கு பிறகு நடிகர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவித்த செய்தி!

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 05, 2021 வியாழன் || views : 322

ரொம்ப நாளைக்கு பிறகு நடிகர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவித்த செய்தி!

ரொம்ப நாளைக்கு பிறகு நடிகர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவித்த செய்தி!

நடிகர் அஜித்குமார் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவுசெய்ததைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமராவதி மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான அவர் பல்வேறு வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் திரையலகிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் செய்தித்தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி. ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்று மூன்று தரப்பினரும் உள்ளனர். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





நடிகர் அஜித்குமாரை பொதுவெளியில் காண்பது என்பது மிகவும் அரிதான விஷயம். அவர் சமூகவலைதளங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் ஏதேனும் வெளியானாலே அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். இந்த நிலையில், திரையுலகில் தனது 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ள செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாரி… வேற மாரி..” என்ற பாடல் வெளியானது. இரண்டாண்டுகள் காத்திருந்த ரசிகர்கள் இந்த பாடலை தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் புதிய அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ajith sensational message on his 30th year completing in the film industry


அஜித் வலிமை AJITH VALIMAI THALA
Whatsaap Channel
விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


விடுகதை :

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


விடுகதை :

ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும்

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட

யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!

யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!


கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!


சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...

சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...


ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக

ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக


கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை

கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next