தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?


உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share