100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?

0
0

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share