காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?

0
0

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share