தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. ஆக அவினாஷ் குமார் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐ.ஜி.ஆக அவினாஷ் குமார் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel