சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் காலை நடைபெறும் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இடையே கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:"வரும் 31, 1 ஆகிய தேதிகளில் சென்னையில் முதன்முதலாக நடைபெறவிருக்கும் எஃப்4 கார் பந்தயம் தொடர்புடைய ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது. அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட அனைத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுமார் 8 ஆயிரம் பேர் அமர்ந்து கார் பந்தயத்தைப் பார்க்கும்படி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை முதல் பகுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம். சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தகுதிச் சுற்று தொடங்குகிறது. இரவு 10.30 மணி வரை கார் பந்தயம் நடைபெறும். எந்தவிதமான போக்குவரத்து இடையூறு இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளன" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!