மலையாள நடிகைகள், துணை நடிகைகள் பிரபல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்து வருகின்றனர். இதனால், மலையாள திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், நடிகைகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னணி நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் தொல்லை குறித்து நடிகை சிமரனும் பகீர் கிளப்பும் தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் போது, அவரால் அதனை உடனே சொல்ல முடியாது. அவர் இருக்கும் சூழல், நேரம் உள்ளிட்டவை எல்லாம் சரியாக அமையும் போது தான் சொல்ல முடியும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
நான் சிறுவயதில் இருந்தே பாலியல் பிரச்னைகளை சந்தித்துள்ளேன். அதனை வெளியே முடியாது. உங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும், அதனை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும், அமைதியாக இருக்கக் கூடாது, எனக் கூறினார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S