விஜய் மாநாட்டுக்கு இடம் கொடுக்க அஞ்சுகிறது திமுக: தமிழிசை விமர்சனம்

By Admin | Published in செய்திகள் at செப்டம்பர் 05, 2024 வியாழன் || views : 572

 விஜய் மாநாட்டுக்கு இடம் கொடுக்க அஞ்சுகிறது திமுக: தமிழிசை விமர்சனம்

விஜய் மாநாட்டுக்கு இடம் கொடுக்க அஞ்சுகிறது திமுக: தமிழிசை விமர்சனம்

மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன். முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் சிலகருத்துகளை பரிமாறிக் கொண்டேன். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின், அங்கு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவதையே பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிய அளவில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு ஓரளவு முதலீடுகள் வருவதற்குகூட, பிரதமர் மோடி மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நல்லெண்ணம்தான் காரணம்.



ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததற்கு மத்திய அரசு காரணம் என தவறான கருத்தை பதிவு செய்கின்றனர். பள்ளிக்கல்வி துறைக்கான 90 சதவீத நிதியை மத்திய அரசு கொடுத்துவிட்டது. முந்தைய தலைமைச் செயலர், பிஎம் திட்டத்தைசெயல்படுத்துவதாக கூறி அதற்கான நிதியை வழங்குங்கள் என்றார். தற்போது, அந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கின்றனர். இதில் முழுக்க தவறு செய்தது திமுகதான்.

திமுக அரசால் கார் பந்தயத்தைநடத்த முடிகிறது. ஆனால், மாநாடு நடத்தவிடாமல் விஜய் கட்சியை முடக்குகிறது. மாநாட்டுக்கு இடம்கொடுப்பதில் என்ன பிரச்சினை, மாநாட்டுக்கான இடத்தை விஜய்தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார். விஜய் மேல் திமுகவுக்கு ஏன் அவ்வளவு பயம். மாநாட்டுக்கு இடம் கொடுத்தால், மடத்தை பிடித்துவிடுவார் என்று திமுக பயப்படுகிறது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் வருவதால், எதிர்க்கட்சிகளை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால், எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது, முடக்கிவிட வேண்டும் என நினைக்கிறது.



அரசுப் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு மொழி படிக்க அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. ஆனால், நம் நாட்டில் உள்ள இன்னொரு மொழியை படிக்கவிடாமல், அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை நசுக்குகிறது. எல்லா துறையிலும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை எங்களை போன்றவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஸ்டாலின் எனது பாதுகாப்பையும், பிரேமலதா பாதுகாப்பையும் நீக்கிவிட்டார். ஆனால், பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பெண் டிஎஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

நடிகர் விஜய் திமுக பாஜக தமிழிசை DMK TAMILISAI VIJAY
Whatsaap Channel
விடுகதை :

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


விடுகதை :

ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்


அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார் போட்டி


சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை

சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next