மனைவியை கணவன் பலவந்தத்தின்மீலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.
இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!