அரியலூர்: தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் நேற்று கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகை கஸ்தூரி கைது அவசியமற்றது. அவர் பேசியதில் காயம்படவோ, வேதனைப்படவோ ஒன்றுமில்லை. வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர்.
கஸ்தூரி பேசியதால் காயமடைந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளாக தமிழ் பேரினத்தை, திராவிடம் என சொல்லி வருகிறார்கள். நாங்கள் எவ்வளவு காயப்பட்டு இருப்போம். கஸ்தூரி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதன் பிறகும் தனிப்படை அமைத்து, வேறு மாநிலத்துக்கு சென்று கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி அப்படி என்ன தவறு செய்தார்?
மணிப்பூர் கலவரம் நீண்டகாலமாக உள்ள சிக்கலாகும். கலவரத்தை கட்டுப்படுத்தவும், அதை தடுக்கவும் ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். பெரிய ராணுவக் கட்டமைப்பு, அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சொந்த நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள கலவரத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தால், எப்படி அதை தடுப்பார்கள்? இவ்வாறு சீமான் கூறினார்
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!