Tamil News & polling
வங்க கடலில் புயல்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில இந்த பருவமழை காலத்தில் முதலாவது புயல் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் மேலும் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.
rainடெல்டா மாவட்டங்களில் கன மழை
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
rainகன முதல் மிக கன மழை
இதே போல நாளை (26ம் தேதி) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
rainசென்னையிலும் மழை
நாளை மறுதினம் ( 27ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது,
rainரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை
இதனிடைய வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி வருகிற 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தீவிர மழை பெய்யும் என கூறியுள்ளார். நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் வருகின 26, 27 தேதிகளில் மிக கனமழை பெய்யும்.
மேலும் 26 தேதி தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் 26 மற்றும் 27ம் தேதிகளில் IMD ரெட் அலர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் சென்னைக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லையென கூறியுள்ளார்,

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு
கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்