இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு புரட்டிப்போடப்போகுது மழை.! ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 25, 2024 திங்கள் || views : 814

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு புரட்டிப்போடப்போகுது மழை.! ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு புரட்டிப்போடப்போகுது மழை.! ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

வங்க கடலில் புயல்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில இந்த பருவமழை காலத்தில் முதலாவது புயல் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் மேலும் புயலாக  மாறவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. 
 
rainடெல்டா மாவட்டங்களில் கன மழை

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
rainகன முதல் மிக கன மழை

இதே போல நாளை (26ம் தேதி) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
rainசென்னையிலும் மழை

நாளை மறுதினம் ( 27ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது,
rainரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

இதனிடைய வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி வருகிற 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தீவிர மழை பெய்யும் என கூறியுள்ளார்.  நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் வருகின  26, 27 தேதிகளில் மிக கனமழை பெய்யும்.

மேலும் 26 தேதி தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் 26 மற்றும் 27ம் தேதிகளில் IMD ரெட் அலர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் சென்னைக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லையென கூறியுள்ளார்,
 

BAY OF BENGAL CYCLONE DELTA DISTRICTS RAIN TAMIL NADU RAINFALL HEAVY RAIN ALERT WEATHER FORECAST கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்கள் மழை தமிழகம் மழை தமிழ்நாடு மழை TAMIL NADU RAIN வங்க கடல் புயல் வானிலை அறிவிப்பு
Whatsaap Channel
விடுகதை :

ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


விடுகதை :

வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


விடுகதை :

ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி  இந்தியா அபார வெற்றி


Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?


திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு


போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை


போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next