POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! - வனிதா விஜயகுமார்

1 year ago 27 நவம்பர் 2024 09:45 AM | views : 222
நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா, எண்ணி நான்கு படங்கள் மட்டுமே நடித்த நிலையில், தன்னுடைய 18 வயதிலேயே ஆகாஷ் என்பவரை 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7 வருடத்திலேயே ஆகாஷிடம் இருந்து வனிதா விவாகரத்து பெற்று பிரிந்தார்.


ஆகாஷ் - வனிதா தம்பதிக்கு விஜயஸ்ரீ ஹரி என்கிற மகனும், ஜோவிகா என்கிற மகளும் பிறந்தனர். ஜோவிகா  வனிதாவுடன் இருக்கும் நிலையில், ஸ்ரீஹரி அவருடைய தந்தையிடம் உள்ளார். மகனை கணவரிடம் இருந்து மீட்க வனிதா போராடிய போதும், மகனின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகிறார்.

 


அவ்வப்போது வனிதா சமூக வலைதளத்தில், தன்னுடைய மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தினாலும், அதை விஜய் ஸ்ரீஹரி கண்டு கொள்வது கூட இல்லை. தன்னிடம் யாராவது அம்மா பற்றி கேள்வி எழுப்பினால் கூட, தன்னுடைய அப்பாவை மட்டுமே அவர் பல விஷயங்களில் குறிப்பிட்டு கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 


ஆகாஷிடம் இருந்து பிரிந்த பின்னர், ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார், அவரிடம் இருந்தும் 5 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இரண்டாவது திருமணம் மூலம் வனிதாவுக்கு ஜெயனித்தா என்கிற மகள் பிறந்த நிலையில், அவர் தந்தையுடன் வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய அம்மாவை வந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.


 


வனிதா வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அவருடைய மூன்றாவது திருமணம் தான். இது அங்கீகரிக்கப்பட்ட திருமணம் இல்லை என்றாலும், சில மாதங்கள் பீட்டர் பால் என்பவருடன் வனிதா ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், பின்னர் அதுவும் முடிவுக்கு வந்தது. 

ஒருவழியாக இந்த சர்ச்சையில் இருந்து மீண்ட, வனிதா விஜயகுமார் மீண்டும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பீல்டு அவுட்டான வனிதாவை மீண்டும் பிரபலம் அடைய செய்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனை பலமுறை வனிதா விஜயகுமார் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளார். 


அம்மா வனிதாவை தொடர்ந்து மகள் ஜோவிகாவும் கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 'இந்த நிகழ்ச்சியில், அண்மையில் ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார்? என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் நிலையில் பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

டபுள் சந்தோஷத்தில் நாகார்ஜூனா; இளைய மகனுக்கு நடந்து முடிந்த நிச்சயம்! Viral Pics!


 


அதில் பேசிய வனிதா விஜயகுமார், தான் பார்த்து வியந்த ஆண் என்றால் தன்னுடைய தந்தை என்றும், அவர் இரண்டு குடும்பத்தையும் சாமர்த்தியமாக கையாண்ட விதம் குறித்தும் பெருமையாக பேசி இருந்தார். இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், "சிறுவயதில் இருந்தே நான் பார்த்து வியந்த மனிதர் என்றால் அது என் தந்தை தான். அவர்தான் இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த கணவரும் கூட.

என்னுடைய அம்மாவை என் அப்பா இரண்டாவது திருமணம் தான் செய்து கொண்டார். இந்த திருமணம் அவருடைய முதல் மனைவி சம்மதத்தோடு தான் நடந்தது. இந்த காலத்தில் ஒரு மனைவியோடு ஒரு ஆண் வாழ்வதே மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது, என் அப்பா இரண்டு மனைவிகளுக்கும் சமமான உரிமை கொடுத்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.


என் அம்மா மற்றும் பெரியம்மா இருவருமே ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் என் அப்பா தான். பொதுவாக பெண்கள் தான் பல விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். திறமையாக பிரச்சனைகளை கையாள்வார்கள். ஆனால் ஆண்கள் அப்படி கிடையாது. அவர்களால் இரண்டு மூன்று பிரச்சனை வந்தால் ஸ்தம்பித்து போய் நின்று விடுவார்கள். ஆனால் என் அப்பா போன்ற ஒரு சில மனிதர்கள் மட்டுமே மிகவும் சாமர்த்தியமாக இந்த விஷயத்தை ஒரே நேரத்தில் லாவகமாக கையாளுவார்கள். என் அப்பா குடும்பம், குழந்தைகள், வேலை, என அனைத்திலும் மிகச்சிறந்தவராகவே இருந்தார்.

ரஜினி - கமல் படத்துக்கு கூட கிடைக்காத மவுசு! தமிழில் முதலில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன படம் எது தெரியுமா?


 


என் வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும் என் தந்தை போல் இருக்க வேண்டும் என நினைத்தேன். என் சகோதரர் அருண் அப்படித்தான் இருக்கிறார். அதனால் கூட எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். அது அமையாததால் மட்டுமே என் வாழ்க்கையில் வந்த ஆண்களுடனான உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் அது விவாகரத்தில் முடிந்தது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சில எதிர்பார்ப்புகள் ஒருவருடைய வாழ்க்கையை கூட மாற்றிவிடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாராளுமன்ற தேர்தல் பாமக கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS கோவை ரஜினிகாந்த் திருமாவளவன் இந்திய அணி UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பிரதமர் மோடி கைது EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் சீமான் COIMBATORE தமிழகம் KEERTHY SURESH THIRUMAVALAVAN தேவர் OPS வன்னியர் INDIAN CRICKET TEAM கொலை அமமுக NELLAI AJITH தென்காசி வடகிழக்கு பருவமழை SURIYA நெல்லை TAMIL ACTRESS கொரோனா PARLIAMENT ELECTION ஓபிஎஸ் மதுரை சூர்யா தமிழ்நாடு திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் BIGG BOSS TAMIL ELECTION COMMISSION அன்புமணி PRIME MINISTER MODI விடுமுறை மோடி அஜித் கீர்த்தி சுரேஷ் CSK ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை தூத்துக்குடி