வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!

By Admin | Published in செய்திகள் at டிசம்பர் 02, 2024 திங்கள் || views : 159

வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!

வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல், இடியுடன் கூடிய அதி கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகவே ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.




நேற்று முன்தினம் திருவண்ணாமலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது, அதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று தர்மபுரி நோக்கி நகர்ந்த நிலையில், இப்போது கர்நாடகாவிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஃபெஞ்சல் புயல் இப்பொழுது வழுவிழந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி இன்னும் சில நாள்களுக்கு மலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




புதுச்சேரியை பொருத்தவரை ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இடுப்பளவு நீரில் தத்தளித்து கொண்டிருந்த மக்களை படகுகளில் சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள், அவர்களை இப்போது தற்காலிக தங்குமிடத்தில் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை அரசு கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




இந்த சூழலில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஈடு கட்டும் வகையில், அங்கு குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் இது இன்றிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புதுச்சேரியை பொறுத்தவரை இன்னும் ஓரிரு நாள்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

FENGAL HEAVY RAIN PONDICHERRY PUDUCHERRY RANGASAMY கனமழை பாண்டிச்சேரி புதுச்சேரி ரங்கசாமி
Whatsaap Channel
விடுகதை :

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


விடுகதை :

முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


விடுகதை :

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next