HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

By Admin | Published in செய்திகள் at ஜனவரி 06, 2025 திங்கள் || views : 130

HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு குழந்தைக்கு ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல்.


பெங்களூருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் (Human Metapneumovirus) பாதிப்பு கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. HMPV வைரஸ் பற்றி தமிழக அரசு என்ன சொல்லி இருக்கிறது? HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகள், அதாவது மூன்று மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை இருவருக்கு HMPV என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு, அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பி இருப்பதாகவும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் HMPV வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், இந்த வகையான தொற்று நோய் காற்றில் பரவக்கூடியது என்றும், கொரோனா தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த HMPV வைரஸ் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் எனவும், மேலும் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா தொற்று போலவே இது அதே பாதிப்பை உண்டாக்கக்கூடிய வைரஸ் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.



HMPV வைரஸ் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மற்றும் தொற்று ஏற்பட்டால் சமாளிக்க முழு தயார் நிலையில் மருத்துவமனைகள் உள்ளன என இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் HMPV வைரஸ் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.



தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லையோர பகுதிகளில் HMPV வைரஸ் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

HMPV HMPV VIRUS பெங்களூரு
Whatsaap Channel
விடுகதை :

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next