இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு குழந்தைக்கு ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல்.
பெங்களூருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் (Human Metapneumovirus) பாதிப்பு கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. HMPV வைரஸ் பற்றி தமிழக அரசு என்ன சொல்லி இருக்கிறது? HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகள், அதாவது மூன்று மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை இருவருக்கு HMPV என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு, அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பி இருப்பதாகவும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் HMPV வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வகையான தொற்று நோய் காற்றில் பரவக்கூடியது என்றும், கொரோனா தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த HMPV வைரஸ் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் எனவும், மேலும் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா தொற்று போலவே இது அதே பாதிப்பை உண்டாக்கக்கூடிய வைரஸ் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
HMPV வைரஸ் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மற்றும் தொற்று ஏற்பட்டால் சமாளிக்க முழு தயார் நிலையில் மருத்துவமனைகள் உள்ளன என இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் HMPV வைரஸ் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லையோர பகுதிகளில் HMPV வைரஸ் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!