பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தந்தை பெரியார் குறித்து பல்வேறு விமர்சனங்களைக் காட்டமாக வைத்தார். பெரியார் சொன்னதாகப் பேசியதற்கு ஆதாரம் கோரி பெரியார் ஆதரவாளர்கள் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.
தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று காலை சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றார்கள். காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். மேலும், புதுச்சேரி சென்றுள்ள சீமானைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் முற்பட்டனர். அங்கும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக சீமான் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக தான் ஆதாரங்களைத் தருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
"சென்னை புத்தகக் காட்சியில் நூல் வெளியீட்டு விழாவில் சீமான் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். இதன்பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பெரியார் எங்கே சொன்னார், எந்தப் புத்தகத்தில் சொன்னார் என்பதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக நான் ஆதாரம் கொடுக்கிறேன்.அதைப் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை என்பது என்னுடையக் கருத்து. காரணம், பெரியார் பேசிய நிறைய புத்தகங்களை அழித்துள்ளார்கள். அந்தளவுக்குப் பெரியார் பேசியிருக்கிறார்.
பெரியார் பேசியிருப்பதாக சீமான் சொன்னதை, எந்தப் புத்தகத்தில் பெரியார் எழுதியிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். காவல் துறையினர் யாரேனும் சீமான் வீட்டுக்கு வந்தால், அந்தப் புத்தகத்தையும் அதன் நகலையும் கொடுத்தால் போதும். ஆனால், பொதுவெளியில் அதைப் பேச நான் விரும்பவில்லை.
காரணம் பெண்கள் பார்க்கிறார்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை எல்லாம் நாம் பேச ஆரம்பித்தால், மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதைப் போன்று சில வார்த்தைகள் அதில் உள்ளது. ஆனால், சீமான் சொன்னது சரி தான் என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு கருத்தை வைத்துள்ளார்கள். சீமான் ஏன் சொன்னார் என்பதை அவர்தான் கூற வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், அவர் பேசியிருக்கிறார் அதற்கான காரணத்தைத் தர நான் தயார்.
காலம் கடந்துவிட்டது, அரசியல் மாறிவிட்டது. மக்கள் புதிய பார்வையில் அரசியலைப் பார்க்கிறார்கள். பெரியார் இதற்கு முன்பு பேசியதை எல்லாம் எடுத்து பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்" என்றார் அண்ணாமலை.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய
சென்னை, நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ்
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜக - திமுக இடையே கடுமையான வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை போல் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டமாக பதிலடி
ஆளும் திமுக அரசுக்கும் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. மேலும் அறிவாலயத்தில் இருந்து ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுப்பேன் என கூறியிருந்தார். இதற்கு
சென்னை : என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன், வரக்கூடாது என்றால் அது என்ன ரெட் லைட்
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!