POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

6 months ago 22 அக்டோபர் 2025 03:03 AM | views : 217
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சக்திவேல் (32 வயது). இவர் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தாத்தா வீட்டில் வசித்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன் சக்திவேலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர்.

அந்த இளம்பெண்ணுடன் சக்திவேல் தனிமையில் நெருக்கமாக இருந்ததை செல்போனில் ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் சக்திவேல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த பெண்ணிடம் ரூ.3 லட்சம் பறித்துள்ளார். பின்னர் மேலும் ரூ.1 லட்சம் தருமாறு அந்த பெண்ணை மிரட்டினார். ஆனால் அவர் சக்திவேலுக்கு கூடுதலாக பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்கள் சிலரின் செல்போனுக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அவர்களும் இளம்பெண்ணை மிரட்டினர்.

இதுகுறித்து இளம்பெண் தனது தாயாரிடம் கூறினார். இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் நேற்று காலையில் தனது தாத்தா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இளம்பெண் தனது சாவுக்கு காரணமானவர்கள் என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பேரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேல், மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜா (36 வயது), முருகேசன் (42 வயது) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK தவெக ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS TAMIL NADU மு.க.ஸ்டாலின் PMK AIADMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கோவை முக ஸ்டாலின் CONGRESS இந்திய அணி ரஜினிகாந்த் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் சீமான் கைது COIMBATORE தமிழகம் வன்னியர் INDIAN CRICKET TEAM அமமுக வடகிழக்கு பருவமழை OPS THIRUMAVALAVAN PARLIAMENT ELECTION KEERTHY SURESH கொலை தேவர் தென்காசி AJITH நெல்லை TAMIL ACTRESS சூர்யா NELLAI தமிழ்நாடு மதுரை SURIYA ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL அஜித் ASSEMBLY ELECTIONS PRIME MINISTER MODI CSK அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION பாலியல் தொல்லை NORTHEAST MONSOON தூத்துக்குடி மோடி கள்ளக்காதல் விடுமுறை கீர்த்தி சுரேஷ்