INDIAN 7

Tamil News & polling

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

By E7 Tamil 18 அக்டோபர் 2021 02:38 AM
Nature

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றது.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு (C VijayaBaskar) சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.



முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றதை அடுத்து சில அதிரடி முடிவுகளை திமுக அரசு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் குறி வைக்கப்பட்டுள்ளனர்.



அதன்படி முதல் படியாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டு அவரிடமிருந்து நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது. அடுத்ததாக அதிமுக முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. இவரிடமிருந்து விலை உயர்ந்த கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது நடந்து வரும் இந்த சோதனையில், அவருக்கு சொந்த நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.







Whatsaap Channel


Image கோபிசெட்டிபாளையம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.


கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்


நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள


திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்


உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை