INDIAN 7

Tamil News & polling

கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்!

By E7 Tamil 18 ஜூலை 2022 07:54 AM
Nature

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் தமிழநாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.

இவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை உடனே சிபிசிஐடிக்கு மாற்றும்படியும், குற்றவாளிகளை கைது செய்யும்படியம் கூறி பல்வேறு போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. இந்த போராட்டங்கள் நேற்று கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மூவரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் அந்த ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள விசாரணை செய்யும் இடம் ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளியில் என்ன நடந்தது? மாணவி இறந்தது எப்படி? மாணவிக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இது போக கலவரம் நடந்தது தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. தாளாளர், செயலாளர் தவிர தற்போது 2 ஆசிரியர்களும் கைதாகி உள்ளதால் இதற்கு பின் வேறு சில காரணங்கள், பின்னணிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. நேரில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.

அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் விதமாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேரடியாக 5 பேரை ரகசிய இடத்தில் சந்தித்து விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மாணவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திட்டமிட்டு இருக்கிறார்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்