கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்!

கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்!

  ஜூலை 18, 2022 | 07:54 am  |   views : 101


கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் தமிழநாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.



இவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.



இந்த நிலையில் இந்த வழக்கை உடனே சிபிசிஐடிக்கு மாற்றும்படியும், குற்றவாளிகளை கைது செய்யும்படியம் கூறி பல்வேறு போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. இந்த போராட்டங்கள் நேற்று கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.




இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மூவரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் அந்த ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள விசாரணை செய்யும் இடம் ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளியில் என்ன நடந்தது? மாணவி இறந்தது எப்படி? மாணவிக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.



இது போக கலவரம் நடந்தது தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. தாளாளர், செயலாளர் தவிர தற்போது 2 ஆசிரியர்களும் கைதாகி உள்ளதால் இதற்கு பின் வேறு சில காரணங்கள், பின்னணிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. நேரில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.



அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் விதமாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேரடியாக 5 பேரை ரகசிய இடத்தில் சந்தித்து விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மாணவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திட்டமிட்டு இருக்கிறார்.






நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

2023-05-07 07:43:07 - 3 weeks ago

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி? மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள


இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!

2023-05-07 07:40:07 - 3 weeks ago

இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..! ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த