கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தேர்வு எழுதி முடிந்து மதியம் வீட்டிற்கு வர வேண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவர் 6 ம் வகுப்பு மாணவனிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்க கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
அதனை அந்த சிறுவனும் நம்பி குடித்து கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் மோதி உள்ளான் இதில் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவன் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுவனுக்கு இரவு நேரத்தில் திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்துள்ளனர்.
இருந்தும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. மேலும் சிறுவனின் வாய் நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பயமடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S