ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு!

ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு!

  நவம்பர் 10, 2022 | 10:53 am  |   views : 1903


டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.




கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.



காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.




Also read...  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய மறுப்பு!

அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது.



நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர்.



அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.



அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் "பலவந்தமாக" பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.



"புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை" என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.



குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.



ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் "தெளிவாக" இருந்ததாக காவல்துறை கூறுகிறது.



அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார்.



பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.



நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை.



ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், "அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது" பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது.



குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது.



டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்



டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.



முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.



இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.



"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.



சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

2024-03-21 08:39:39 - 1 week ago

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

2024-03-21 16:00:29 - 6 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்


நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

2024-03-28 03:13:53 - 8 hours ago

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


பாஜக கூட்டணியில் இணையும் பாமக!

2024-03-18 10:58:13 - 1 week ago

பாஜக கூட்டணியில் இணையும் பாமக! நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.


ஆன்லைனில் கடன் வாங்கிய மாணவர் தற்கொலை

2024-02-28 05:02:42 - 1 month ago

ஆன்லைனில் கடன் வாங்கிய மாணவர் தற்கொலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார். லோன் ஆப் மூலம் பெற்ற


தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ். திணறல்

2024-03-17 09:17:20 - 1 week ago

தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ்.  திணறல் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம்


அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை!

2024-03-07 22:15:43 - 2 weeks ago

அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை! நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்


கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்- விஜய் வசந்த் மீண்டும் நேரடி மோதல்?

2024-03-18 10:42:56 - 1 week ago

கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்- விஜய் வசந்த் மீண்டும் நேரடி மோதல்? இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற