இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!

இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!

  டிசம்பர் 26, 2022 | 08:58 am  |   views : 2345


சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி விடுகின்றனர்.



அவர்கள் வளர்ந்து பெரியவர்களானாலும் கூட இரவு ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு தான் தூங்க செல்வார்கள். ஒருநாள் இரவு பால் குடிக்கவில்லை என்றாலும் கூட எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். இந்த பட்டியலில் நீங்களும் ஒருவரா.? உங்களின் தினசரி இந்த இரவு பழக்கம் உங்கள் உடல் நலம் குறைய மற்றும் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா...?



உண்மையில் இரவில் தூங்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுவதாக பல ஆண்டுகளாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நிபுணர்கள் பலர் இந்த தினசரி இரவு பழக்கம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் எடை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம் என கூறுகிறார்கள். இரவில் கட்டாயம் பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கத்தை நீங்கள் ஏன் மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே...



மலச்சிக்கல்: தினசரி இரவு நேரத்தில் கோல்ட் மில்க் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்திற்குள் பலர் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சாப்பிட்ட இரவு உணவே சரியாக செரிமானம் ஆகியிருக்காத நிலையில், தூங்குவதற்கு முன் பால் குடிப்பது செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.



Also read...  கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!


எடை அதிகரிப்பு: இரவில் பால் குடிப்பதன் காரணமாக புரோட்டின் மற்றும் பால் கொழுப்புகளை வளர்சிதைமாற்றம் செய்து ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் ஆட்டோமேட்டிக்காக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. தோராயமாக 1 கிளாஸ் பாலில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. ஆனால் இரவில் கலோரிகள் எளிதில் எரிக்கப்படுவதில்லை, இதனால் உடல் எடை கூடும் வாய்ப்புகள் அதிகம்.



செரிமான பாதிப்பு: இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் சில நேரங்களில் நபருக்கு நபர் மாறுபடலாம். குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத ஒருவர் இரவில் பால் குடித்தால், அவரது செரிமானத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இரவு நேரத்தில் நமது உடல் ஓய்வில் இருக்கும் போது பாலில் உள்ள புரோட்டினை வளர்சிதைமாற்றம் செய்வது உடலுக்கு கடினமாக இருக்கும். இதனால் அசௌகரியம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.



வளர்சிதைமாற்றம் மெதுவாகும்: இரவில் பால் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதோடு கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இது உட்லைன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மெதுவாக்குவதோடு கொழுப்பு படிவு (fat deposition) மற்றும் எடை அதிகரிக்க காரணமாகிறது.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!

2024-04-18 07:00:35 - 9 hours ago

கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,


தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்

2024-04-17 07:33:01 - 1 day ago

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி


தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்

2024-04-16 04:28:29 - 2 days ago

தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில்


வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

2024-04-15 10:54:01 - 3 days ago

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட


அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

2024-04-15 10:52:48 - 3 days ago

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

2024-04-14 17:26:01 - 3 days ago

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக போலீசார்


தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

2024-04-14 04:58:49 - 4 days ago

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

2024-04-13 12:41:46 - 5 days ago

3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில்