முத்துராமலிங்க தேவர் பற்றி கிருபானந்த வாரியார் வார்த்தைகள்!!

முத்துராமலிங்க தேவர் பற்றி கிருபானந்த வாரியார் வார்த்தைகள்!!

  செப்டம்பர் 25, 2023 | 03:36 pm  |   views : 613


"அண்ணா" மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில் தெய்வ நிந்தனை செய்ததும், அதற்க்கு தேவரின் கண்டிப்பையும் பற்றி அண்ணாமலை அவர்கள் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேசினார். இதற்கு சில வாரங்கள் முன் தற்செயலாக இந்த நிகழ்வை பற்றி "பல ஆண்டுகளுக்கு முன் கிருபானந்த வாரியார் சுவாமிகள்" கொடுத்த பேட்டி



கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வார்த்தைகள்!!



" 56-ல் மதுரையிலே நிகழ்ந்த முத்தமிழ் மாநாட்டிலே ஒரு அரசியல்வாதி ஞானசம்பந்தரை சற்று குறைவாக பேசினார். அப்பொழுது முத்துராமலிங்க தேவர் பெரிய கிளர்ச்சி செய்து, கோயிலுக்குள்ளே சமய நிந்தனைகள் செய்யக் கூடாது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கோயிலுக்கு வெளியே பொய் பேசிக் கொள்ளுங்கள் என்று தீவிரமாக வீர கர்ஜனை புரிந்தார். அந்த மாநாடு நடந்த பிறகு 2-ம் சவுக்கு மாநாட்டிலே வந்து கலந்து கொண்டார். அப்போது நான் மலேசியாவில் இருந்தேன். பத்திரிகையிலே வந்தது. தேவரும் இதைச் சொன்னார். மதுரையில் கதை நடக்கிறபொழுது மீண்டும் ஒரு முறை இதே மாதிரி சொல்லி சமய சிந்தனைகள் ஆலயங்களுக்குள் நிகழக்கூடாது அதை நாங்கள் பொறுத்துக் கொண்டியிருக்க மாட்டோம் என்று தனக்கே உரிய அழுத்தந்திருத்தமான கருத்துக்ளோடு கண்டனம் தெரிவித்தார்!



மேலும் இதே போன்ற வரலாறை கூறினார்!!



Also read...  கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு


ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் தேவருக்கும் நெருங்கிய உறவு உண்டு. பாஸ்கர சேதுபதி காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை பற்றி தேவர் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ராமநாதபுரத்திலே ஒரு நாடகம் சமய நிந்தனையோடு நடந்தது. முத்துராமலிங்க தேவருடைய பாட்டனார் இதை கண்டு பொறுக்காமல் அப்போதிருந்த சேதுபதி அவர்களுக்கு ரொம்ப கடினமான ஒரு கடிதம் எழுதினார். ராமநாதபுரம் சேதுபதி அவர்களுக்கு வணக்கம்! தங்கள் ஆட்சியிலே, தங்கள் ஊரிலே தெய்வ நிந்தனையோடு கூடிய நாடகம் நடந்தது என்று கேள்விபடுகிறேன். இப்படி நடக்கலாமா? நடக்க நீங்கள் உடன்படலாமா? அப்படி நடக்க நீங்கள் விடலாமா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் படை திரண்டு வந்து அரண்மனையை இடித்தால் அரண்மனையில் செங்கல் தான் மீதியாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன் என்று கடிதம் போட்டார். சேதுபதி நெருங்கிய உறவு ஆகையினால் சிரித்து கொண்டே இங்கே சுமுகமாக வாருங்கள் என்று எழுதியிருந்தார்கள். முத்துராமலிங்க பாட்டனார் அங்கே போனார், சேதுபதி அன்போடு வரவேற்றார். ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையாக கடிதம் எழுதியிருந்தீர்கள்? அதற்கு தேவருடைய பாட்டனார் சொன்னாராம், "மகாராஜா, நான் தவறாக எழுதி விட்டேன். எல்லோரும் ஒன்றாக வந்து அரண்மனையை இடித்தால் ஆளுக்கொரு செங்கல் வரும் என்று எழுதினேன். சிந்தித்து பார்க்காமல் எழுதி விட்டேன். அவர்கள் எல்லோரும் திரண்டு வந்து இடித்தால் ஆளுக்கொரு செங்கல்பொடி பல் துலக்க ஆகும் என்பதை நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அதைவிட கடுமையாக சொன்னார். சேதுபதி சிரித்துக்கொண்டே அவரை கட்டித் தழுவி இனிமேல் இப்படி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். இதை முத்துராமலிங்க தேவரே சொன்னார்...


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

2024-05-03 11:52:16 - 1 hour ago

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா,


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 1 hour ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்

2024-05-03 05:15:11 - 7 hours ago

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம் சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர்


வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது

2024-05-02 10:37:23 - 1 day ago

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம்,


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 1 day ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 4 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 4 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்