நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 2019 தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த முறை ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட தயக்கம் காட்டலாம் என தெரிகிறது.இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏன் அமேதியை விட்டு ஓடினார்? இதற்கு முன்பு அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்தான். முன்னதாக, அந்த தொகுதியில் அவரது தந்தை மற்றும் மறைந்த மாமா சஞ்சய் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். அதனால் இந்த முறையும் போட்டியிடும் தைரியம் ராகுல் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? ஏனென்றால் அங்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இந்த முறை அவருக்கு அங்கும் கடும் போட்டி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பாட்னா சாகிப் மக்களவை தொகுதியின் எம்.பி.யான ரவி சங்கர் பிரசாத், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!