INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஏப்ரல் 11, 2024 | 02:57 am | Views : 60

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு:

ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மானாமதுரை, கடலாடி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.இத்தொகுதி முதல் மூன்று முறையும் காங்கிரஸ் வசமிருந்தது. நாகப்ப செட்டியார் என்பவரே இத்தொகுதியின் முதல் எம்.பி ஆவார்.ஃபார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த பி.கே.மூக்கையா தேவர் ராமநாதபுரம் தொகுதியின் எம்.பியாக இருந்தவர். சேதுபதி சமஸ்தான வாரிசு ராஜேஸ்வர சேதுபதி, நடிகர் ஜே.கே ரித்திஷ், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி போன்றோர் இத்தொகுதியின் பரிட்சயமான எம்.பிக்கள் ஆவர்.ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், ஃபார்வர்டு பிளாக், த.மா.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.

2019 தேர்தல் முடிவுகள்:

2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி 44.29% வாக்குகளுடன் மொத்தம் 469,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்றார். தனியாக களமிறங்கிய அமமுகவின் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 14,925 வாக்குகளும் கிடைத்தன.

ராமநாதபுரம் தொகுதியை பற்றி..

தமிழகத்தின் பின் தங்கிய வறட்சி பகுதியாக கருதப்படுகிறது ராமநாதபுரம் மாவட்டம். குடிநீர் பிரச்னை தலையாய பிரச்னையாகும். அதே நேரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், உலகின் முதல் கோவிலாக கருதப்படும் உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம் நவகிரக கோவில், திருப்புல்லானி, ஏர்வாடி தர்கா என ஆன்மிக ரீதியாகவும் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க இடமாக திகழ்கிறது ராமநாதபுரம். இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அகதிகள் முகாம் என சென்சிடிவ் ஆன விவகாரங்கள் உள்ளது இத்தொகுதி. முன்பெல்லாம் தமிழக மீன்வர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்தது. தற்போது அது முற்றிலும் குறைந்துள்ளது.புயலால் அழிந்த தனுஷ்கோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடல் மீது போடப்பட்ட பிரம்மாண்ட பாம்பன் பாலங்கள் என இத்தொகுதியின் சிறப்புகள் ஏராளம். என்னன்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியது இத்தொகுதி.

முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்கள். குறிப்பாக மீன் பிடி தொழில் சார்ந்த ஏற்றுமதி தொழிலும் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் தொகுதியில் நடந்துள்ளன.மொத்த வாக்காளர்கள் எவ்வளவு?கடந்த ஜனவரி 2024-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.68 லட்சம். இதில் ஆண்கள் 5.80 லட்சம் பேர், பெண்கள் 5.88 லட்சம் பேர்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்

2024 தேர்தலில் ராமநாதபுரம் பிரதமர் மோடியே களமிறங்கும் தொகுதியாக பேசப்பட்டது. தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கியிருப்பதால் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

அதிமுகவில் தலைமை பொறுப்பு வகித்து பின்னர் அக்கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் பெரும்பான்மை சமூகமான முக்குலத்தோர் வகுப்பு வாக்குகள் அவருக்கு பக்கபலம். கூடுதலாக பாஜக ஆதரவும் அவருக்கு உள்ளது. ஓபிஎஸ்-ஐ ஒழித்துக்கட்ட வேண்டும் என முனைப்புடன் அவருக்கு எதிராக மேலும் 5 பன்னீர்செல்வத்தை எதிர் தரப்பு களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய அளவில் திமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே தான் பிரதான போட்டி என கூறப்படுகிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்.பி ஆன ஐ.யூ.எம்.எல் கட்சியின் நவாஸ் கனிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைத்துள்ளது. அவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளும், திமுக கூட்டணியின் அசுர பலத்துடன் அவர் தேர்தலை எதிர்கொள்கிறார்.

அதிமுக சார்பாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். எனினும் அவரின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம் ஆகும். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அண்ணன் திமுக பிரமுகர் அக்ரி கணேசன். மற்றொரு சகோதரர் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா. இவரின் தந்தை எம்.ஜி.ஆரை எதிர்த்து திமுக சார்பாக போட்டியிட்டவர். முக்குலத்து சமூக வாக்குகள் இவரின் பலம்.

நாம் தமிழர் சார்பாக சந்திர கலா போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்

Keywords: ராமநாதபுரம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


விடுகதை :

இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


விடுகதை :

100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 2 days ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 5 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.