நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கங்கனா ரனாவத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.28.7 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 62.9 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கங்கனா ரனாவத்திடம் கையிருப்பு தொகையாக ரூ.2 லட்சம் உள்ளதாகவும், வங்கி கணக்கில் ரூ.1.35 கோடி உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மும்பை, பஞ்சாப் மற்றும் மணாலியில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.3.91 கோடி மதிப்பிலான 3 சொகுசு கார்கள் தன்னிடம் இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, கங்கனா ரனாவத்திடம் ரூ.5 கோடி மதிப்பிலான 6.7 கிலோ தங்கம், ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும், அவரது பெயரில் 50 இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ரூ.7.3 கோடி மதிப்பிலான கடன்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கங்கனா ரனாவத் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் உள்பட மொத்தம் 8 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
நடிகை செளந்தர்யா விபத்தின் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் மூத்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்பிருப்பதாகவும் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக கொடிகட்டிப் பறந்தார் செளந்தர்யா. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!